அன்பெனும் மாய ஊஞ்சல் அசைந்தாடக் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஏறும் யாருமே அவ்வன்பை அனுபவிக்காமல் போனதில்லை. அது அப்பா மகளாக இருக்கலாம். அம்மா மகளாக இருக்கலாம். காதலன் காதலியாக இருக்கலாம். அக்கா தங்கையாகவும் இருக்கலாம்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் அன்பு.. பாசம்.. காதல்..
என்ற மென்மையான உணர்வுகள் கோபம்... பொறாமை, போன்ற உணர்ச்சிகளை எப்படி அடக்கி ஆள்கிறது என்பதைக் காண... அன்பெனும் சங்கிலிப் பிணைப்பில் ஆடும் இந்த மாய ஊஞ்சலில் ஆட வருமாறு அனைவரையும் அழைக்கிறேன்.