இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள்அனைத்தும் ஏதோ ஒருவகையில் குழந்தைகளோடு சம்பந்தமுள்ளகதைகள்.
இந்தக்கதைகளுள் குழந்தைகளின் மனோ உணர்ச்சி, நடவடிக்கைகள் முதலியவற்றை மட்டுமே சித்தரித்துள்ள கதைகளும் உண்டு. எனினும், கதை என்பது வெறும் வர்ணனையோ, வர்ணப் படமோ அல்ல. கலைப் பணியில் வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்புவது, நான் ஏற்றுக் கொண்டுள்ள கலைக் கொள்கைக்குப் புறம்பானது. வாழ்க்கையின் பிரச்சனைகள் எவ்வளவு இயல்பானதோ, அவ்வளவு இயல்பாக இலக்கியத்தில் பிரச்னைகள் தாமாகவே ஊடுருவி நிற்கும்போது அதை வடிகட்டித் தர எனக்கென்ன உரிமை?